நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து - பெண் படுகாயம்

நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து - பெண் படுகாயம்

காவல் துறை

நடந்து சென்ற பெண் மீது கார் மோதிய விபத்தில்பெண் படுகாயம் அடைந்தார்.காவல்துறை வழக்கு பதிவு.
நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து. பெண் படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவ. கரூர் மாவட்டம், நெரூர்,கிருஷ்ணா கோவில் அருகே வசித்து வருபவர் தங்கவேல் மனைவி மீனா வயது 47. இவர் மார்ச் 18 ஆம் தேதி மாலை 7 மணி அளவில், கரூர் காமராஜ் மார்க்கெட், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் கரூர் மாவட்டம், குளித்தலை,மேட்டு மருதூர் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அருள் வயது 29 என்பவர் ஓட்டி வந்த கார், நடந்து சென்ற மீனா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மீனாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, மீனா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை அஜாக்கிரதையாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அருள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story