கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய சாலை மறியல் செய்வர்கள் மீது வழக்கு

கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய சாலை மறியல் செய்வர்கள் மீது வழக்கு

 சாலை மறியல்

மயிலாடுதுறை நகரில் நடைபெற்ற கொலையில் குற்றவாளிகள் கைது செய்ய கோரி நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை திரு இந்தளூர் பகுதியில் கலைஞர் காலனியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிப்படுகொலை செய்தனர் . இது குறித்து கலைஞர் காலனியை சேர்ந்தவர்களும் அவரது உறவினர்களும் மயிலாடுதுறை நகரில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து மற்றும் வியாபாரம் முடங்கியது. இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா விசாரணை மேற்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட துரைக்கண்ணு, கதிரவன், பிரபாகரன், மோகன்குமார், சூர்யா, திவாகர் உட்பட மற்றும் பலர் மீது 143, 341 சட்டப்பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story