பயிற்சி மருத்துவர் மீது வழக்கு பதிவு

பெண் பயிற்சி மருத்துவரை காதலித்து, ஏமாற்றிய ஆண் பயிற்சி மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெண் பயிற்சி மருத்துவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டு, ஏமாற்றிய ஆண் பயிற்சி மருத்துவர் மீது நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் வழக்கு பதிவு. கரூரில் பரபரப்பு. சென்னை, கொருக்குப்பேட்டை, நமச்சிவாய முதலியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மகள் சண்முகப்பிரியா வயது 25. இதே போல மதுரை வளர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்வர். இவர்கள் இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2023 ஜூலை மாதம் முதல் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். இருவரும் காதலித்து உள்ளனர். இதனிடையே, ராஜேஷ்வர் சண்முகப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் உடலுறவு கொண்ட பிறகு, தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், சண்முக பிரியாவை தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்ததோடு, அவரை துன்புறுத்தியும் உள்ளார். இது தொடர்பாக சண்முகப்பிரியா கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இது தொடர்பாக சட்ட ஆலோசனை கேட்டு கரூர் மகிளா நீதிமன்றத்தில் காவல்துறையினர் விண்ணப்பித்தனர். இந்த பிரச்சனையை பரிசளித்த நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல் முறைப்படி, காதலித்து, உடலுறவு கொண்டு ஏமாற்றிய ராஜேஷ்வர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர்.

Tags

Next Story