செல்போன் பேசியபடி பேருந்து இயக்கம் - பயணிகள் புகாரால் போலீசார் நடவடிக்கை

செல்போன் பேசியபடி பேருந்து இயக்கம் - பயணிகள் புகாரால் போலீசார் நடவடிக்கை

செல்போன் பேசியபடி பேருந்து இயக்கம் 

காரைக்காலில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஆம்னி பேருந்தில் குறைபாடுகள் இருந்ததால் பயணிகள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

காரைக்காலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்றது. இந்த பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகளுக்கு மூச்சு திணறியுள்ளது. மேலும் ஏற்கனவே பயன்படுத்திய பெட்சீட், பேருந்தின் எஞ்சின் சத்தம் ஆகியவை குறித்து பயணிகள் புகார் செய்தனர். ஆனால் இதைக்கண்டுகொள்ளாமல் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றார். மயிலாடுதுறை அருகே வந்தபோது பயணிகள் செம்பனார்கோவில் காவல்நிலையத்திற்கு பேருந்தை செலுத்த சொல்லியுள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கருணாகரனிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த போலீசார் 20 பயணிகளின் பயணக்கட்டணத்தை திருப்பி பெற்று அவர்களிடம் வழங்கினர்.பின்னர் பயணிகள் மாற்று பேருந்து மூலம் சென்னை சென்றனர்.

Tags

Next Story