தருமபுரம் ஆதீன மட தேரோட்டம்

தருமபுரம் ஆதீன மட தேரோட்டம்

தேரோட்டம்

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமக்கும் பட்டணப்பிரவேசம் 30ம் தேதி நடைபெறுகிறது. அதன் முன்னோட்டமாக திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது

. மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு நாற்காலி பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் ஆதீ னத்தை பள்ளத்தில் வைத்து மனிதர்கள் சுமக்கும் புகழ்பெற்ற பட்டணப் பிரவேச, நிகழ்வும் நடைபெற உள்ளது.

ஆதீனம் ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வீடியோவும் ஆடியோவும் உண்மையா பொய்யா என்று இதுவரை அரசு வெளியிடவில்லை ஆனால் தொடர்ந்து ஆதீனம் தனது பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சர்ச்சைக்குரிய மனிதனை மனிதன் சுமக்கும் பட்டணப்பிரவேச முயற்சியும் நடத்த உள்ளார். ஆதீனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்கள் இதுவரை ஜாமீனில் வெளிவர முடியாமல் சிறையில் உள்ளனர் . வழக்கில் உள்ளமேலும் 4 பேர் கைது செய்யப்படவில்லை இந்நிலையில் பட்டிணப்பிரவேசத்தை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story