மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ராயனூரில் நடக்கும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ராயனூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ராயனூர் ஆர் ஆர் திருமண மண்டபத்தில் "மக்கள் உடன் முதல்வர் திட்ட முகாம்" நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45, 46, 47 வது வார்டு பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்தும், பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களில் உள்ள குறைபாடுகள் குறித்தும் மனுக்களாக அளித்தனர். இந்த முகாமில் பணியில் உள்ள அரசு துறை அதிகாரிகள், மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்து, அவர்களுக்கு ரசீது நகல் அளித்தனர். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் சம்பந்தப்பட்ட மூன்று வார்டுகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சிறப்பித்து வருகின்றனர்.

Tags

Next Story