மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில்  நாளை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

ஆட்சியர் அலுவலகம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள்; மயிலாடுதுறை நகராட்சி, சீர்காழி நகராட்சி, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதிகளில் நாளை 18ஆம் தேதி ஜனவரி 6ஆம் தேதிவரை வரை நடைபெற உள்ளது- மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், நாளை ,18ம்தேதி அன்று ,மயிலாடுதுறை நகராட்சியைசேர்ந்த , 24,25,35,36,23,17 வார்டு மக்கள் மயிலாடுதுறை புலியன் தெரு, வாசுகி திருமண மண்டபத்திலும், குத்தாலம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 1,2,3,10,11,12,13,14 வார்டு மக்கள் குத்தாலம் சிதம்பரநாத முதலியார் தெரு, அம்ரா திருமண மண்டபத்திலும் ,மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள், அரசின் பல்வேறுதுறை சேவையை பெறுவதற்கு , உரிய மனு மற்றும் ஆவணங்களுடன் வரவேண்டுமாய் மாவட்டஆட்சியர் மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story