முதல்வர் வருகை:தஞ்சை டி ஐ ஜி ஆய்வு

முதல்வர் வருகை:தஞ்சை டி ஐ ஜி  ஆய்வு

ஐஜி ஆய்வு

மயிலாடுதுறைக்கு வருகை தரவுள்ள தமிழக முதல்வர் பாதுகாப்பு குறித்து திருச்சி ஐஜி. தஞ்சை டிஐஜி மயிலாடுதுறை எஸ்பி ஆகியோர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று முதல்வர் வருகை பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை 28 12 2020 அன்று உருவாக்கப்பட்டு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ரூ.140 கோடி அளவில் ஏழு மாடிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது .

இதன் திறப்பு விழா வரும் நான்காம் தேதி நடைபெற உள்ளது இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்க இருக்கிறார் . தமிழகமுதல்வர் வருகை குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி ஐஜி கார்த்திகேயன் தஞ்சை டி ஐ ஜி ஜியாஉல்ஹக் மயிலாடுதுறை எஸ்பி மீனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஐ ஜி டி ஐ ஜி யை போலீஸ் மரியாதை உடன் வரவேற்றனர்.

Tags

Next Story