தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கைக்குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கைக்குழந்தை பலி

 குழந்தை பலி

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் தண்ணீர் தொட்டி அருகே விளையாடிய கைக்குழந்தை தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள வாங்க பாளையம் எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவரது மகன் தஷ்வந்த் வயது 1 3/4. இவரது வீட்டின் அருகே திறந்த நிலையில் தண்ணீர் தொட்டி ஒன்று இருக்கிறது. தண்ணீர் தொட்டி அருகே ஏப்ரல் 18ஆம் தேதி காலை 11 மணியளவில், குழந்தை தஸ்வந்த் விளையாடி கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கியது.

இதனை சற்று காலதாமதமாக அறிந்த அந்த குழந்தையின் தாயார் சுகன்யா வயது 34 என்பவர், தனது குழந்தையை மீட்டு, உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த குழந்தை தஸ்வந்தின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Tags

Read MoreRead Less
Next Story