மயிலாடுதுறையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்


போக்குவரத்து கழகத்திற்கு புதிய பணியாளர்களை நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் 15-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும், புதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், போதுமான உதிரி பாகங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராமானுஜம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், சங்கத்தின் மண்டல பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மண்டல தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story