வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தூய்மை பணி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தூய்மை பணி

தூய்மை பணி

மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தொண்டு நிறுவனத்தினர் நடத்திய மெகா தூய்மைப்பணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துவங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வாகன பதிவு செய்வதற்கும், வாகன உரிமம் பெறுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு குப்பைகள் தேங்கியதால் தனியார் தொண்டு நிறுவனத்தினர், அறக்கட்டளை சார்பில் மெகா தூய்மைப்பணி நடைபெற்றது. பசுமை நேச கரங்கள், ஜி.எம்.அறக்கட்டளைகள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்ற தூய்மை பணியை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் துவங்கி வைத்தார். இன்றும், அடுத்த சனிக்கிழமையும் இந்த தூய்மைப் பணி சுமார் இரண்டரை ஏக்கரில் நடைபெறும்.

Tags

Next Story