முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 3ம் கட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 3-ம் கட்டம் விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 3-ம் கட்டம் விரிவாக்கம். மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆலோசனை. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் தற்போது செயல்பாட்டில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக, கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story