திமுகவினர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

திமுகவினர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

காவல்துறை விசாரணை


மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் திமுகவினர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் நெய்த வாயல் மற்றும் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ். கே ரமேஷ் ராஜ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிடும் சசிகாந்த் செந்திலுக்கு வாக்கு சேகரிக்கும் விதத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் அன்று சலவை தொழிலாளிக்கு வழங்கப்பட்ட சலவைப் பெட்டியால் துணிகளுக்கு சலவை செய்து ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் டீக்கடையில் டீ ஆத்தியும், ஆட்டோ மற்றும் டிராக்டர் வண்டிகளில் வந்த விவசாய பெருமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

Tags

Next Story