3 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பயனாளிகளுக்கு விலை இல்லா வீட்டுமனை பட்டா வழங்கி ஆட்சியர் தங்கவேல் வாழ்த்து தெரிவித்தார்.

வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காரணமாக குறைதீர்க்க கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, நேற்று முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்து 261 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். ஏற்கனவே வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனி துணை ஆட்சியர் சாய் புதின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன், கலால் உதவி இயக்குனர் கருணாகரன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story