தனியார் வீட்டுமனை பிரிவுகளுக்காக நீர்வரத்து கால்வாய்களை அக்கிரமிக்கப்படுவதாக புகார்

தனியார் வீட்டுமனை பிரிவுகளுக்காக நீர்வரத்து கால்வாய்களை அக்கிரமிக்கப்படுவதாக புகார்

புகார் 

பொன்னேரி அருகே தனியார் வீட்டுமனை பிரிவுகளுக்காக நீர்வரத்து கால்வாய்களை அக்கிரமிக்கப்படுவதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் போராக்ஸ் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று வீட்டுமனை பிரிவுகளுக்காக அளவீடு செய்து வருகிறது. இந்நிலையில் அருகில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

நீர்வரத்து கால்வாய்கள் அக்கிரமிக்கப்படுவதால் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படும் எனவும், மேலும் முறையாக ஏரிகளுக்கு செல்லும் நீர் குடியிருப்பு பகுதிளுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story