தமிழகத்தில் பூரண மதுவிலக்கு : மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு : மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், சாராய சாவுகளை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளை தொடர்ந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் முபாரக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு தைரியமாக முடிவெடுத்து மக்கள் வாழ்வை சீரழிக்கின்ற டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராய சாவுகளை தடுத்து நிறுத்த வேண்டும், நச்சு சாராயத்தை அனுமதித்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story