தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பறிமுதல்: மேல் முறையீடு செய்ய வழிவகை

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக  பறிமுதல்: மேல் முறையீடு செய்ய வழிவகை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் பணம் மற்றும் பொருள்கள் குறித்து மேல்முறையீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில், 'பாராளுமன்ற தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகளின்படி, தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்பாணிப்பு குழுவினரால் உரிய ஆவணங்களின்றி கைப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் ரொக்கத்தொகைகள் ஆகியவைத் தொடர்பாக மேல்முறையீடு ஏதேனும் இருப்பின், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளம் அறை எண்.45-ல் மேல்முறையீடு குழுவிடம் மாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் தெரிவிக்கக்கேட்டுகொள்ளப்படுகிறது.

மேற்காணும் பொருள் தொடர்பாக விவரங்களுக்கு மாவட்ட கருவூல அலுவலர் கைப்பேசி எண்: 7530014473, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கைபேசி எண்: 8667425364-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story