சொகுசு காரில் கடத்தி வந்த கள்ளச்சாராயம் பறிமுதல்

சொகுசு காரில்  கடத்தி வந்த கள்ளச்சாராயம் பறிமுதல்

மயிலாடுதுறையில் சொகுசு காரில் கடத்தி வந்த கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


மயிலாடுதுறையில் சொகுசு காரில் கடத்தி வந்த கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு (ஸ்கார்பியோ) சொகுசு காரில் பாண்டி சாராயம் கடத்தி வருவதாக மயிலாடுதுறை போலிசாருக்கு கிடைத்ததாக ரகசிய தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான போலீசார் மயிலாடுதுறையில் சந்தேகத்திற்கிடமான சென்ற சொகுசு காரை விரட்டி சென்றதில் காரை ஓட்டுநர் பேருந்து நிலையம் அருகே உள்ள கார் ஸ்டாண்டில் விட்டுவிட்டு தப்பி ஓட்டம். சொகுசு காரை சோதனை செய்ததில் 7 மூட்டைகளில் இருந்த 550 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மயிலாடுதுறை தூக்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத், கார் டிரைவர் மணிகண்டன் ஆகிய இருவருக்கு வலைவீச்சு.

Tags

Next Story