ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத் தலைவர் செல்ல பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மயிலாடுதுறை ஸ்டேட் வங்கி முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மாநில செயலாளர் கே.பி.எஸ்.எம் கனிவண்ணன், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம் உள்பட பல்வேறு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அரசியல் கட்சிகள் நிதி பெற்ற விவகாரத்தில் பாஜக அதிக நிதிகளை வசூல் செய்துள்ளது. இதன் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது. பாஜகவுக்கு யார் யாரிடம் இருந்து பணம் வந்தது என்ற விவரத்தை அளிப்பதற்கு உச்ச நீதிமன்றத்திடம் எஸ் பி ஐ வங்கியானது கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story