வேளாண்மைதுறை சார்பில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு

வேளாண்மைதுறை சார்பில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு

விழிப்புணர்வு பிரச்சாரம்


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்துவேளாண்மைதுறையின் பயிர் காப்பீடு விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என, போற்றப்படும், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள், இந்நாளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில், அரசு அலுவலர்கள், ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேன, விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து வேளாண்மைத் துறை சார்பில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தை, ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், பயிர் காப்பீடு குறித்த விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த வாகனம், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

Tags

Next Story