காட்டிற்குள் கிடந்த யானை பாகனின் சடலம்: போலீசார் விசாரணை.

காட்டிற்குள் கிடந்த யானை பாகனின் சடலம்: போலீசார் விசாரணை.

 ஆனைமலை அருகே காட்டிற்குள் கிடந்த யானை பாகனின் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆனைமலை அருகே காட்டிற்குள் கிடந்த யானை பாகனின் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சி:ஆனைமலையை அடுத்த டாப்சிலிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பாகனாக பணியாற்றி வந்தவர் 40 வயதான ராஜ் குமார். இவரது மனைவி 39 வயதான மஞ்சு. இத்தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.ராஜ்குமார் டாப்ஸ்லிப்பில் இருந்து ஆனைமலை மற்றும் டவுன் பகுதிக்கு சம்பளம் எடுப்பதற்காகவும், மளிகை சாமான்களை பெறுவதற்காகவும் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வீட்டில் இருந்து சென்ற ராஜ்குமார் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி மஞ்சு இது குறித்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளார்.பின்பு தனது கணவரை காணவில்லை என ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் மனக்கடவு மாரியம்மன் கோவில் அருகே வனப்பகுதிக்குள் வன காவலர் ரோந்து பணி மேற்கொண்டபோது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த நபர் ராஜ்குமார் என்பதை உறுதி செய்தனர்.ராஜ்குமார் ஏதேனும் வனவிலங்குகள் தாக்கியதால் இறந்தாரா அல்லது இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story