எலி மருந்து உட்கொண்ட நபர் உயிரிழப்பு

மது குடிக்க மனைவி பணம் தராததால், எலி மருந்து உட்கொண்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
மது குடிக்க மனைவி பணம் தராததால், எலி மருந்து உட்கொண்ட நபர் உயிரிழப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டு துறை, 2-வது தெருவை சேர்ந்த சேகர் வயது 50 என்பவர், தற்போது திருமாநிலையூர் குடித்தெரு பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பவானி வயது 48. சேகர் மது பழக்கத்திற்கு அடிமையானதால், நாள்தோறும் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். வழக்கம்போல ஜனவரி 27 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், மீண்டும் மது குடிக்க மனைவி பவானியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், பவானி பணம் தர மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சேகர், எலி மருந்து சாப்பிட்டு, சுங்க கேட் பகுதியில் உள்ள துளசி மெடிக்கல் அருகே உயிருக்கு போராடி உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி பவானி, தனது கணவன் சேகரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சேகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பவானி தாந்தோனிமலை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த சேகரின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

Tags

Next Story