குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெற்றோருக்கு கொலைமிரட்டல் - மகன்கைது

குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெற்றோருக்கு கொலைமிரட்டல் -  மகன்கைது

காவல் நிலையம் 

மணல்மேடு பகுதியில் குடிக்க பணம்கொடுக்க மறுத்த பெற்றோரை அடித்துக் கொலைமிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு புதுகாலணிப் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, இவர் தனது வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மூத்தமகன் சென்னையில் வேலை பார்த்துவருகிறார், இளைய மகன் அஜய் திருப்பூரில் வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு திருப்பூரிலிருந்து வந்த அஜய், தான் கொண்டுவந்த பணத்தைவைத்துக் குடித்து ஒழித்துள்ளார்.

மேலும் குடிப்பதற்குப் பணம்கேட்டு பெற்றோருடன் வம்பு வளர்த்துள்ளார், மீண்டும் திருப்பூருக்கு வேலைக்குப்போ என்று சொன்ன தந்தையிடம் குடிக்கப்பணம் கேட்டால் கொடுக்காமல் புத்திமதியா சொல்கிறாய் என்று திட்டிக் கொண்டே கட்டையை எடுத்து தந்தையை சகட்டுமேனிக்குத் தாக்கியுள்ளனர், அதை தடுக்க வந்த அவரது தாயாரையும் தாக்கிப் போட்டுவிட்டு போய்விட்டார், இதுகுறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து அஜயைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story