கணவன் வாங்கிய கடன்: இளம்பெண் மீது தாக்குதல்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளம் பெண்ணை தாக்கி துன்புறுத்திய இருவர் மீது வழக்கு பதிவு.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் மனைவி ரஞ்சிதா. வயது 29. இவர் தற்போது கரூர், சுக்காலியூர் அருகே உள்ள டி.செல்லாண்டி பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீலமேகம்,கரூர் தோரனக்கல்பட்டி அருகே உள்ள சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் வயது 40 மற்றும் காமராஜபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் வயது 21 ஆகியோரிடம் ரூபாய் 60 ஆயிரம் கடன் பெற்று இருந்தார்.

வாங்கிய கடனை முறையாக நீலமேகம் திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், அக்டோபர் 28ஆம் தேதி இரவு 7 மணி அளவில் தீபா மருத்துவமனை அருகே நடந்து சென்ற ரஞ்சிதாவை இடைமறித்து, பணத்தை கொடு என்று கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், தகாத வார்த்தை பேசி, கைகளாலும், காலாலும் ரஞ்சிதாவை தாக்கி துன்புறுத்தி உள்ளனர்.

பாலசுப்பிரமணியமும்,சந்தோசும். இந்த சம்பவத்தில் ரஞ்சிதாவுக்கு கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் மாநகர காவல் துறையினர், இது தொடர்பாக பாலசுப்பிரமணியம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் மீதும் அக்டோபர் 29ஆம் தேதி இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story