மத்திய அரசை கண்டித்து, சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, சிபிஎம்  கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

மத்திய அரசை கண்டித்து, சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து, கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிபிஎம் மாவட்ட பொது குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், எதிர்க்கட்சிகளை ஆளுநர்களை வைத்து, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் கரூர் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு,திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், திமுக கரூர் வடக்கு மாநகர செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, கரூர் மத்திய நகர செயலாளர் கனகராஜ்,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் இளங்கோவன், தி.க கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி, திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story