மத்திய அரசு, ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு, ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில், மத்திய அரசு மற்றும் ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறையில், மத்திய அரசு மற்றும் ஆளுநர்களின் அத்துமீறலை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தியும், கூட்டாட்சி முறைக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக அரசையும், ஆளுநர் ஆர்.என். ரவியையும் கண்டித்து தமிழக முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் எம் எல் ஏ வுமான நிவேதா முருகன், காங்கிரஸ் மாவட்ட தலைவரும் எம்எல்ஏவுமான ராஜகுமார் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஏராளமான கலந்து கொண்டு கண்டன‌ உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, ஒன்றிய பாஜக மோடி அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருவதாகவும், பாஜக அல்லாத மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதியை பாரபட்சமான முறையில் பகிர்ந்து அளிப்பதும், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கு தடை விதிப்பது, ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்கம் செய்து வருகிறது.

கூட்டாட்சி முறைக்கு எதிராகவும், இந்திய அரசியல் சட்ட விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பது போன்ற தேச விரோத செயல்களை செய்து வரும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story