கரூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

கரூரில்,லஞ்சம் கேட்கும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் டாஸ்மார்க் மொத்த வணிக குடோன் முன்பு, கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அன்னம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஜேம்ஸ், மாநில பொது செயலாளர் குமார், மாநிலத் தலைவர் முருகன், கரூர் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநில துணைத்தலைவர் ராமர், ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டு லஞ்சம் கேட்கும் டாஸ்மாக் மேலாளர் பொன்னம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மாத சரக்கு விற்பனையில் 5 சதவீதம் பணத்தை லஞ்சமாக கேட்டு மிரட்டும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலாளாருக்கு தெரியாமல் பணம் பெற்றுக் கொண்டு 60க்கும் மேற்பட்ட பணி மாறுதலை தன்னிச்சையாக செய்தது தொடர்பாகவும், ஆய்வு என்ற பெயரில் தணிக்கை செய்ய லஞ்சம் பெற்றுக் கொள்வதும்,

லஞ்சம் கொடுக்க விரும்பாதவர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் விற்பனையாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கும் மாவட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story