உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்


உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய ஓய்வூதியல் நல சங்கத்தினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக மாநில துணைத்தலைவர் மணிமாறன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் 75க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இபிஎஸ் -95 திட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட பென்ஷன் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஓராண்டாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக தீர்ப்பை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இபிஎஸ் 95 பென்சனர் அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சன் மாதம் 9 ஆயிரம் பஞ்சபடியுடன் வழங்க வேண்டும் இ .எஸ் .ஐ .மருத்துவ காப்பீடு வசதியும் மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில்வே கட்டின சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர்

Tags

Next Story