டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி - இந்திய இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவனம்

2 ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் என இந்திய இம்யூனி நியூலாஜிக்கல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த் குமார் தெரிவித்தார்.

பொள்ளாச்சி (ரோட்டரி சங்கம்) தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் ரத்த வங்கி பிரிவிற்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய இம்யூனிநியூ லாஜிக்கல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த்குமார் கலந்து கொண்டு பேசினார்.. பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் நோய்களை வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயார் செய்து உள்நாடு மற்றும் 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தற்போது டெங்கு,சிக்கன் குனியா, ஜிக்கா போன்ற நோய்களுக்கான தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெங்கு தடுப்பூசி மருந்து வினிநோயகம் செய்யப்படும் மஞ்சள் காமாலை நோய் தடுப்பூசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் தடுப்பூசி ஆராய்ச்சி பணியில் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்தார்.

Tags

Next Story