தருமபுர ஆதீன தொடக்கப்பள்ளியில் பொதுமக்களுக்கு குளுகுளு பானம்

தருமபுர ஆதீன தொடக்கப்பள்ளியில் பொதுமக்களுக்கு குளுகுளு பானம்

தண்ணீர் பந்தல்

தருமபுரம் ஆதினம் சார்பில் கோடை வெயிலை சமாளிக்கவும் பொதுமக்களின் நலன் கருதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கல்வி நிலையங்கள் மற்றும் கோயில்களில் கத்திரி வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் சமாளிக்க நீர் மோர் பந்தலை திறக்க தருமபுரம் ஆதீனம் அறிவுறுத்தியிருந்தார்.

இதனை ஏற்று, தருமபுரம் ஆதீன திருமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளியில் நேற்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இம்மாதம் 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த நீர்மோர் பந்தல் செயல்படும். இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு விளாமிச்சை வேர், கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த மூலிகை குடிநீர் மற்றும் நீர்மோரை பொதுமக்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தார்.

Tags

Next Story