கலைஞர் புகைப்பட கண்காட்சி பார்வையிட்ட தருமபுரம் ஆதீனம்

கலைஞர் புகைப்பட கண்காட்சி பார்வையிட்ட தருமபுரம் ஆதீனம்

புகைப்பட கண்காட்சியில் தருமபுரம் ஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனக்கல்லூரியில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு புகைப்பட கண்காட்சியை தருமபுரம் ஆதீனம் 27-வது சந்நிதானம் பார்வையிட்டார்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு புகைப்பட கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் பங்கேற்று புகைப்பட கண்காட்சி 5 நாள்கள் நடைபெறுகிறது.

இதில், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 1934-ஆம் ஆண்டு தாயார் அஞ்சுகம் அம்மையார், தந்தை முத்துவேலர் ஆகியோருடன் 10 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடங்கி, இளமைக்கால புகைப்படங்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கி.வீரமணி உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட முன்னாள் குடியரசுத் தலைவர்கள், இந்திராகாந்தி, வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், கலைஞர் நூற்றாண்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், இந்த கண்காட்சியில் தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்துடன் கலைஞர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தருமபுரம் ஆதீனம் 27-வது சந்நிதானத்துடன் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை தருமபுரம் ஆதீனம் 27-வது சந்நிதானம் பார்வையிட்டார். அப்போது, திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story