மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது, .
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மங்கைநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தீமிதி உற்சவம் கடந்த பத்தாம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீமிதி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் கூண்டு காவடி எடுத்தும் , பக்தர்கள் அலகு குத்தியும் தீமிதித்த காட்சி காண்போரை பக்தி பரவசமடைய செய்தது. இறுதியாக சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story