தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தென்னை விவசாயிகளில் வாழ்வாதாரம் மேம்பட தீர்வு காணப்படும் என பொள்ளாச்சி நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்தராஜன் வாக்குறுதியளித்தார்.

தென்னை விவசாயிகளில் வாழ்வாதாரம் மேம்பட தீர்வு காணப்படும் என பொள்ளாச்சி நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்தராஜன் வாக்குறுதி.. பொள்ளாச்சி..மார்ச்..26 பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிற்க 'வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க' எனும் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே நடைபெற்றது.. கூட்டத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தராஜன் கலந்து கொண்டார் கூட்டத்தில் பங்கேற்ற தென்னை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் மேம்பட வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடிய வசந்தராஜன் பொள்ளாச்சி தென்னை விவசாயத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது எங்களது பிரதான வாக்குறுதியாக விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்பட வைப்பது தான் தற்போது தென்னை மரங்களை தாக்கி வரும் நோய் தாக்குதல் தண்ணீர் பிரச்சினை தேங்காய் க்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலை உள்ளது.. ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் ஜெயித்த பின் விவசாயிகள் குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை அந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் நிக்க வச்சு சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க என்பதை முன்னுறுத்தி எனது பிரச்சாரத்தை விவசாயிகளிடமிருந்து தொடங்குகிறேன்.. விவசாயிகளுடன் ஒருவனாக இருந்து அவர்களின் சிரமங்களை கேட்டு அருந்தி மத்திய அரசு மூலமாக பெற்று தருவதே எனது குறிக்கோள் மேலும் கயிறு தொழிற்சாலைகள் ஆனைமலை நல்லாறு திட்டம் தேங்காய் எண்ணெயை பாரத் அரிசி என்பது போல் பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனையை கொண்டு வந்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன் என்றும் அப்படி இல்லை என்றால் எங்களை கேள்வி கேட்க அனைத்து உரிமையும் விவசாயிகளுக்கு உள்ளது என கூறினார்.. கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story