ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்கோட்டை - நாகலாபுரம் சாலையில், தமிழக -- ஆந்திர எல்லையில். ஊத்துக்கோட்டை போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த, 'பஜாஜ்' இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில், 6 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ் என்கிற பாபு, 53, என்பவரை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story