கொள்ளிடம் கதவணை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கொள்ளிடம் கதவணை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை அருகே ரூ.465. 42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆதனூர் - குமாரமங்கலம் கதவணைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை அருகே ரூ.465. 42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆதனூர் - குமாரமங்கலம் கதவணைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவிரியில் வெள்ளப்’பெருக்கு ஏற்பட்டால் திருச்சி காவிரி ஆற்றில் பிரியும் கொள்ளிடம் ஆறில் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. எவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கொள்ளும் ஆறு கொள்ளிடம் என்று பெயர் பெற்ற இந்த கொள்ளிடம் ஆறு திருச்சி தஞ்சை கடலூர் அரியலூர் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது. கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காட்டூர் என்ற இடத்தில் கடலில் கலக்கின்றது.

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி உபயோகப்படுத்தவும் கடல் நீர் உட்புகாமல் தவிர்க்கவும் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கப்படும் என்று 2014 ஆம் ஆண்டு 110 விதியின்கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 465 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி 2019 ஆம் ஆண்டு துவங்கியது. 0.334 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் 82 மதகுகள் அமைக்கப்பட்டு இரண்டு மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு வழிவகுக்கும் வகையில் கதவணை பாலம் கட்டப்பட்டு வருகிறது. 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் எஞ்சிய இறுதி கட்டப் பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்’ இன்று கதவணை பணிகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திட்ட வரைபடத்தைக் கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து நதி முடுக்கு வாய்க்கால் நீரொழுங்கி மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால் நீர் ஒழுங்கி கட்டப்பட்டு வருவதை ஆட்சியர் பார்வையிட்டார். ‌

இப்பணிகள் நிறைவுற்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் 6320 ஏக்கர் விளைநிலங்களும் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 16313 ஏக்கர் விளைநிலங்களும் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. நீரோழுங்கி கட்டுமான பணிகள் காரணமாக அப்பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் இடிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் அதற்கு அருகிலேயே வேறொரு தண்ணீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிகாரிகள் முயற்சி செய்வதாக தெரிவித்த நிலையில் முயற்சி எல்லாம் செய்யக்கூடாது நாம்தான் மக்களுக்கு செய்து தர வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து தண்ணீர் டேங்க் அமைத்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Tags

Next Story