கொ.ம.தே.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கரூரில் கொ.ம.தே.க., சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன கொங்கு மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற உள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் தேர்தலின் போது அமைக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சி நிறைவில் கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது திமுக தலைமையிலான கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பேசி வருவதாகவும், இதில் நமது கட்சியின் சார்பில் பொதுக் குழு கூடி உரிய முடிவுகள் மேற்கொண்டு, உரிய நேரத்தில் அதை கூட்டணி கட்சியினருக்கு தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story