மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம் !

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம் !

கிரிக்கெட் போட்டி 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுகாக்களை சேர்ந்த 16 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

லீக் சுற்றுகளாக, ஹார்ட் டென்னிஸ் பந்து கொண்டு நடைபெறும் இந்த போட்டியை மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபாடி கழக தலைவர் ரஜினி தொடக்கி வைத்தார். இதில் முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.8,000 மற்றும் நான்காம் பரிசு ரூ.7,000 வழங்கப்பட உள்ளது. போட்டியில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு ஆக்ரோஷமாக மோதி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story