மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றுத்திறனாளியிடம் பரிவு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றுத்திறனாளியிடம் பரிவு

மாற்றுத்திறனாளியிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம் செய்தவரிடம் எஸ்பி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


மாற்றுத்திறனாளியிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம் செய்தவரிடம் எஸ்பி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மயிலாடுதுறை அறுபத்துமூவர்பேட்டை பகுதியை சேர்ந்தசிலம்பரசன் மனைவி ஜெயந்தி (25). இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியான இவர், சிறுவயது முதல் தேனீர் வியாபாரம் செய்து சிறுக சிறுக சேமித்த பணத்தை திருமணத்தின்போது திரு திரும்பத் தருவது எனக்கூறி அதே பகுதியை சேர்ந்து நபர்கள் ரூ.3 லட்சம் வரை வாங்கியுள்ளனர். ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற போது பணத்தை யாரும் கொடுக்க முன்வரவில்லை.

இது குறித்து பலமுறை அவர்கள் கேட்டும் பலன் இல்லாததால் தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர், அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் வாங்கியவர்களும் தரவில்லை காவல்துறையினரும் நடவடிக்கை இல்லாமல் ஏளனம் பேசினர் இதுகுறித்து கடந்த 13ஆம் தேதி மயிலாடுதுறை எஸ் பி அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் விரக்தி அடைந்த ஜெயந்தி இன்று மயிலாடுதுறை எஸ் பி அலுவலகம் முன்பு தனது கணவருடன் தரையில் அமர்ந்து கொண்டார்

இதை கேள்விப்பட்ட எஸ் பி மீனா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து மாற்றுத்திறனாளியிடம் குறையை கேட்டறிந்தார், அருகில் மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடனே இருந்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இவரை ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தை பெற்று தர அறிவுறுத்தினார் . மாற்றுத்திறனாளியான ஜெயந்தியை ஏமாற்றியவர்கள் வீட்டிற்கு போலீசார் அழைத்துச் சென்று உடனடி நடவடிக்கையில் இறங்கினர். எஸ்பியின் அதிரடி நடவடிக்கையை மாற்றுத்திறனாளி ஜெயந்தியும் அவரது கணவர் சிலம்பரசனும் பாராட்டினர்.

Tags

Next Story