விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் மௌன அஞ்சலி

விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் மௌன அஞ்சலி

விஜயகாந்திற்கு அஞ்சலி

தேமுதிக நிறுவன தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் மயிலாடுதுறையில் மௌன அஞ்சலி செலுத்தினர்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு மயிலாடுதுறையில் தேமுதிகவினர் மௌன அஞ்சலி செலுத்தினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் பண்ணை பாலு தலைமையில் தேமுதிகவினர் மறைந்த விஜயகாந்த் பிளக்ஸ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது ஆன்மா சாந்தி அடைய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அறம்செய் அறக்கட்டளையினர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே விஜயகாந்த் உருவ பேனர் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story