பைக் பேரணியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் !

பைக் பேரணியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் !

 பைக் பேரணி

விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் திமுக அரசால் மட்டுமே ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற முடியும் பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆனைமலையில் தேர்தல் பரப்புரையில் பேச்சு.

விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் திமுக அரசால் மட்டுமே ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற முடியும் பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தேர்தல் பரப்புரையில் பேச்சு.

பொள்ளாச்சி ஏப்ரல் 17 மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக திமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவை தேர்தலுக்கான இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளிட்ட பகுதியில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இருசக்கர வாகன பேரணியின் மூலமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து பேசியவர் ஆனைமலையில் அறநிலை துறை மூலமாக தொழில் பயிற்சி பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் , விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்ற பொள்ளாச்சி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருப்பது விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது என்றும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்கான நீர் பாசன குறைகளை களையப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான நீர்வள ஆதாரங்களை பாதுகாத்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட்டார்.ம.சக்திவேல் பொள்ளாச்சி 9976761649.

Tags

Read MoreRead Less
Next Story