கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அன்னதானம்

கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அன்னதானம்

அன்னதானம்

ஜவஹர் பஜார்- கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

.கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு தரப்பினரும் இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்தனர். இதில் கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், அம்மா மருந்தகம் அருகில், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அன்னதான விழா நடைபெற்றது. இந்த அன்னதான விழாவில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் கலந்து கொண்டு, அங்கு அமைக்கப்பட்டு இருந்த மாரியம்மன் திருவுருவ சிலைக்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

பின்னர் தக்காளி சாதம், தயிர் சாதம், மற்றும் பொங்கல் வழங்கும் விழாவை துணை மேயர் தாரணி சரவணன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கரூர் நகர பகுதி செயலாளர்கள் ஜோதிபாசு, இந்தியன் குமார், மற்றும் சுப்பிரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அன்னதான விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story