சாராயம் குடிக்காதே... மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

சாராயம் குடிக்காதே... மனைவி கண்டித்ததால்   கணவன் தற்கொலை

மயிலாடுதுறை அருகே சாராயம் குடிக்காதே என மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

மயிலாடுதுறை அருகே சாராயம் குடிக்காதே என மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில், இலுப்பப்பட்டை சேர்ந்தவர் மகேஸ்வரன், இவரது மனைவி இளஞ்சியம். 54 வயதுகொண்ட மகேஸ்வரன் விவசாய வேலை பார்த்துவந்துள்ளார். தினந்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி இளஞ்சியத்திடம் தகராறு செய்வது வாடிக்கை. சம்பவ தினத்தன்று , மகேஸ்வரன் குடித்துவிட்டு வந்துள்ளார், அவரதுமனைவி இளஞ்சியம், ஏன் இப்படி குடித்துவிட்டுவந்து தகராறு செய்கிறாய், இனிமேல் குடிக்கக்கூடாது என்ற பல முறை கூறியும் நீ திருந்தவே மாட்டியா என திட்டியுள்ளார்.

போதையில் இருந்த மகேஸ்வரன் மனம்வெறுத்து சென்று பூச்சிமருந்தை மதுவுடன்கலக்கி மீண்டும் குடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார். அவரை மயிலாடுதுறை அரசு மருத்தவமனைக்குக் கொண்டு சென்றனர்,மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story