முதியவர் மாயம் - காவல்துறை வழக்கு பதிவு !

முதியவர் மாயம் -  காவல்துறை வழக்கு பதிவு !

காவல்துறை வழக்கு பதிவு

ஜோதிடத்தில் போதிய வருவாய் இல்லை. முதியவர் மாயம். காவல்துறை வழக்கு பதிவு.
ஜோதிடத்தில் போதிய வருவாய் இல்லை. முதியவர் மாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர், பாஞ்சாலங்குறிச்சி, ரங்கப்பநாயக்கனூர் அருகே உள்ள வெங்ககல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 61. இவர் ஜோதிடராக பணியாற்றி வந்தார் சுப்பிரமணிக்கு ஏற்பட்ட நோய் தாக்கம் காரணமாகவும், ஜோதிடத்தில் போதிய வருவாய் இல்லாததால் விரக்தியில் வாழ்ந்து வந்தார். இதனால் தனது தொழில் ஸ்தானத்தை திரு முக்கூடலூருக்கு மாற்றி தொழில் செய்ய சென்றவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக அவர் செல்லும் உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறாததால், தனது தந்தையை காணவில்லை என சுப்பிரமணியின் மகன் ராமராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான ஜோதிடர் சுப்பிரமணியை தேடி வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story