கரூர் மருத்துவக் கல்லூரியில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

கரூர் மருத்துவக் கல்லூரியில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

கரூர் மருத்துவ கல்லூரி

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு ஏப்ரல் 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது திடீரென அங்கு மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவரிடம் தூக்கிச் சென்று காட்டிய போது, மருத்துவர்கள் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யார்? என இதுவரை அறியப்படவில்லை.

இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் குமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று,

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த முதியவரின் உடலை அடையாளம் காண்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story