மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு திட்ட இணை செயலாளர் இளவரசன் தலைமையில்; நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், அரசாணை 6 மற்றும் 7-ஐ ரத்து செய்ய வேண்டும், கேங்மேன் ஊழியர்களுக்கு விருப்ப ஊர் மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும், கேங்மேனை கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும், வழங்கப்பட்ட ஊதிய உயர்வுகளை கேங்மேனுக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் பகுதிநேர பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், மின்வாரிய உள்முகத்தேர்வில் கேங்மேனுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story