இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியார் துறை சார்பில் வரும் 9ம் தேதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.  

மயிலாடுதுறையில் தனியார் துறை சார்பில் வரும் 9ம் தேதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், 09.12.2023- அன்று, சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ,சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மயிலாடுதுறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விளம்பர வாகனத்தை மாவட்ட, ஆட்சியர் மகாபாரதி , கொடியசைத்து துவக்கி வைத்தார். இம்முகாமில் கலந்து கொள்ள சென்னை, கோவை, திருச்சி உட்பட பெருநகரங்களில் இருந்தும், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ,அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும், 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள், கலந்து கொண்டு ,தங்கள் நிறுவனத்தில் உள்ள, காலி பணியிடங்களுக்காக ,10,000க்கும் மேற்பட்ட ,தகுதிவாய்ந்த வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

தாட்கோ போன்றவை வாயிலாக ,வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும், வழங்கப்படவுள்ளது. எனவே, படித்து முடித்து தனியார் துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் ,இளைஞர்கள் நேரில், தங்கள் சுய விபரம், அனைத்து கல்வி சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றின் அசல்,நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு 04364299790, 9786386722, 9994653425 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம், என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story