ஆங்கில புத்தாண்டு: மாசாணி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டு: மாசாணி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும்.இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்,வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாசாணி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Next Story