முன்னாள் ராணுவத்தினர் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு தேர்தல் பணிக்கு வாய்ப்பு

முன்னாள் ராணுவத்தினர் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு தேர்தல் பணிக்கு வாய்ப்பு

காவல்துறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவலர்களுக்கு வாய்ப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் காவல்துறை அறிவிப்பு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு அலுவலில் பணிபுரிய விருப்பமுள்ள முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல் ஆளிநர்கள் தங்களது அடையாள அட்டையுடன் (ஆதார் அட்டை) மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 28.03.2024-ம் தேதிக்குள் தங்களது விருப்ப மனுவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story