தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி

தேர்தலில் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி

சிறப்பு கூட்டம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியான ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் எளிதாக வாக்களிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. உடன் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)கீதா,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story