பாம்பு கடித்து விவசாயி பலி
![பாம்பு கடித்து விவசாயி பலி பாம்பு கடித்து விவசாயி பலி](https://king24x7.com/h-upload/2024/01/12/359020-image3a1000540187.webp)
காவல் நிலையம்
மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் கண்ணாடிவிரியன் பாம்பு கடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(65) விவசாயி. இவர் சம்பவ தினத்தன்று தனது வயலுக்கு சென்றுள்ளார். மதிய நேரத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணாடிவிரியன் பாம்பை மிதித்துவிட அது ராஜேந்திரன் வலது காலில் கொத்திவிட்டது. இதனால் மயக்கமடைந்தார். இதைக் கண்ட சக விவசாயிகள் ராஜேந்திரனை தூக்கிகொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், மறுநாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செற்னர், ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணைமேற்கொண்டனர்.
Next Story